Deivathin Kural ("தெய்வத்தின் குரல்")
பரோபகாரம் - பகுதி 35 _________
அந்திம நினைப்பின் முக்கியத்துவம்
தெய்வ நினைப்புடன் தூக்கம்
மோக்ஷத்துக்குக் குறுக்கு வழி
தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும்.
அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்து விடவேண்டும்.
வேறே நினைப்பு வரக்கூடாது.
சொல்லும்போது ஸுலபமாக இருக்கும்.
ஆனால் பண்ணிப் பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும்.
காமாக்ஷியோ,
நடராஜாவோ,
தக்ஷிணாமூர்த்தியோ,
வேங்கடரமண ஸ்வாமியோ,
முருகனோ --
எந்த தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அந்த இஷ்ட தெய்வத்தையே அல்லது அந்த இஷ்ட தெய்வத்துக்கு ஸமானமாக நமக்கு
சாந்தியும் ஸந்துஷ்டியும் தருகிற ஒரு குரு,
அல்லது மஹானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால்,
'இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது ?
மனஸுக்கு ரம்யமாகவும் ஆறுதலாகவும் இருக்கப்பட்ட இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன ச்ரமம் ?' என்றுதான் தோன்றும்.
ஆனால் எதனாலோ, சிறிது நேரமானால் இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டுவிட்டு மனஸ் வேறெங்கேயாவதுதான் போய் விழும்;
அப்படியே கண்ணை அசக்கித் தூக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.
இப்படி ஏமாறாமல் பழக்கிக் கொண்டால் சாகிற சமயத்திலும் பகவானை விடாமல் நினைக்க முடியும் என்ற நிச்சயத்தைப் பெறலாம்.
எல்லாம் அப்யாஸத்தில் விடாமுயற்சியில்தான் இருக்கிறது.
நம்முடைய ச்ரத்தையைப் பொறுத்து பரமாத்மாவே கை கொடுப்பார்.
ஶ்ரீமஹாபெரியவா